31 March 2008

கரையோர முதலைகள்


கரையோரம் முகவாய் வைத்து
கதவு போல் வாய் பிளந்து
பல்லிடுக்கில் அழுகிப் போகும்
மாமிச எச்சம் கொத்த
பறவைக்காக காத்திருக்கும்
கரையோர முதலைகள்.
பறவையும் மாமிசம் தானே
பட்டுப் போல் வாசனை தானே.
முதலைகள் ஒரு நாளும் தர்மம் மாறா.
ஞானிகள் எந்நாளும்
வஞ்சனையில்லாப் பிறவி.
மனிதரின் மனமெங்கும்
மாமிச எச்சம் மலை போல் இருந்தாலும்
ஒரு நாளும் வாய் திறவார்.
உள்ளத்தை வெளியே சொல்லார்.
சுத்தத்தை விரும்பும் உயிர்கள்
தர்மத்தை கட்டிக் காக்கும்.
மனிதரைத் தவிர இங்கே
அனைத்துப் பிறப்பும் சுத்தம்!
-பாலகுமாரன்