
முதல் நாள் சந்தித்த
நீ இல்லை நீ.
நீ முதல் நாள் சந்தித்த
நானுமில்லை நான்.
யாருமிங்கு இல்லை
முதல் நாள் சந்தித்த யாருமாய்.
வசந்தங்கள் வந்து போகும்
பருவம் உதிரும் பொழுதுகளில்
காத்திருப்போம் நாம்
இனி வரும்
முதல் நாளுக்காகவும்
எதிர்ப்படும்
முதல் நபருக்காகவும்!
-சில்வியா
No comments:
Post a Comment