29 November 2009

இன்னும் ....

கால் ஒடிந்த காக்கைக்கு
எப்படி நேர்ந்தது
இந்த விபத்து?
அடை மழை பெய்யும் போது
அணில்கள்
எங்கே உறையும்?
நடுநிசியிலும் குரைக்கும்
நாய்கள் எப்போதுதான்
உறங்கும்?
எல்லார் வீட்டிலும்
விரட்டப்படும் பூனைக்கு
யார்தான் சோறு இடுகிறார்கள்?
ஏழெட்டு எறும்புகள்
ஏலேசா பாடி
தூக்கிச் செல்லும் பருக்கை
கூட்டை சென்றடைகிறதா?
சின்ன வயதில்
தோன்றிய கேள்விகள்...
இன்னும்
விடை கிடைக்க வில்லை.
என்ன, இப்போது
இந்த மாதிரி
அசட்டுக் கேள்விகள்
தோன்றுவதில்லை!

-கே.பி.ஜனா

No comments:

Post a Comment