13 December 2009

நிசப்தம்


வீட்டுக்குள்
நுழையும் போதே
வெறுப்பேற்றும்
குழந்தையின் அழுகைக் குரல்
அவசர மின்னஞ்சலோ
ஆசைப்பட்ட பாடலோ
அலுவலக அலைபேசியோ
எதுவும் செய்ய
அனுமதிப்பதில்லை
பிள்ளை என்ற தொல்லை
என்றாலும்...
இந்த மழையின்
நீட்சியில்
மாலையிலேயே
உறங்கிப்போய்
அவன்
எழுப்பும்
நிசப்தம்
அதிர வைக்கிறது
மனதை!

-நரசிம்

No comments:

Post a Comment