15 March 2009

மூலதனம் - இலாபம்

எங்கள் குடும்பத் தொழில் விவசாயம். ஒரு அறுவடையின் போது , அறுத்துக் கட்டும் வயலில் , வழக்கத்துக்கு அதிகமாக நெல்மணிகள் உதிர்ந்திருந்தன. சடையாரி என்னும் நெல்லினம். சற்று அதிகமாகவே உதிரும்.
அப்பாவிடம் கேட்டேன், "வயலில் உதிர்ந்து போகும் நெல் அனைத்தும் நமக்கு நட்டம் தானே!" அப்பா சொன்னார் , " அப்படி இல்ல மக்கா ! இந்த மண்ணு நமக்கு சொந்தமில்ல. இந்த வெயிலு, காத்து, மழை எதுக்கும் நாம துட்டு தர்றதில்ல. இந்த உலகத்திலே நம்மளைப் போல காக்கா, குருவி, தவளை, நண்டு,நத்தை,விட்டிலு, தட்டான் ,பூச்சிங்கன்னு நெறைய சீவிச்சிருக்கு. இந்த விளைச்சல்ல அதுகளுக்கும் பங்கு குடுக்கணும்.நாம பாடுபட்டதுக்கு உண்டானதை நாம எடுத்துக்கலாம். அதுக்கு மேல ஆசைப்படக் கூடாது."

-நாஞ்சில் நாடன்
நன்றி : ஆனந்த விகடன்

1 comment:

  1. ப்ளாக் எழுத நேரம் கிடைக்கிறதா Medes ?

    ReplyDelete