20 August 2010

திருஷ்டி

குளிப்பாட்டி அலங்கரித்த
அழகுக்குப் பயந்து
கன்னத்தில் வைத்தாகிவிட்டது
கருஞ்சாந்துப் போட்டு.

அள்ளியெடுத்துக் கொஞ்சும்
அண்டை வீட்டாருக்காக
அடுப்பில் போட்டாகிவிட்டது
படிகாரமும் உப்பும்
மிளகும் தடவி.

அறியாமல் பட்ட
கண்களுக்குமாய்
தெரு வாசலில் கொளுத்தியாகிவிட்டது
தலையைச் சுற்றிய கற்பூரம்.

எல்லாம் செய்தது முடித்த பின்னும்
யோசித்து மாய்கிறாள் தாய்...
குழந்தையின் மீது விழுந்த
தன திருஷ்டிக்கு
என்ன பரிகாரம் செய்வதென்று?

-ஆனந்த விகடன்

No comments:

Post a Comment