22 October 2010

வாழும் அனுபவம் - 1


            அதிகாலைப் பனி விலக்கி
            ஆதவன் உதிக்கும் முன்,
            ஆழ்நிலைத் துயில் விலக்கி
            ஆனந்தக் குளியல் நடத்தி
            உடன் குளிர்ந்த உடம்புடன்
            கனம் குறைந்த மனதுடன்
            இஷ்ட தெய்வம் தொழுது
            நெற்றியிலிட்ட நீறுடன்
            ஸ்கந்த குரு கவசம்
            சன்னமாய்க் காதில் ஒலிக்கக்
            கேட்கும் அனுபவமே
            வாழும் அனுபவமாம்!

No comments:

Post a Comment