22 October 2010

வாழும் அனுபவம் - 3


                  
                   அதிகாலை கண் விழிக்கும்
                   வழக்கத்திற்கு விதி விலக்காய்
                  'ஞாயிறு' வந்து எனை எழுப்பும்
                   ஞாயிற்றுக் கிழமை விடியல்தனில்
                   சாம்பல் நிற கனவு பிரித்து
                   சோம்பல் முறிக்க சோம்பலுற்று 
                   நட்போடு மனைவி தரும்
                   'பெட் காபி' தனை சுவைத்து
                   சூடான செய்தி தரும்
                   செய்தித்தாள் தனைப் பிரித்து
                   வாசிக்கும் தருணமே
                   வாழும் அனுபவமாம் !

No comments:

Post a Comment