22 October 2010

வாழும் அனுபவம் - 5




                    மழை ஓய்ந்த பின்னிரவில்
                    அலை ஓய்ந்த மனதோடு
                    இதமான குளிர் அறையில்
                    மிதமான உண்டி முடித்து
                    உடலுறுத்தா தலையணையில்
                    வாகாய்த் தலை சாய்த்து
                    அதிராத பாடலின்
                    சுகராகப் பின்னணியில்
                   அவிழாத புதிரவிழ்க்கும்
                    புதிதாய் ஒரு புதினத்தை
                    வாசிக்கும் அனுபவமே
                    வாழும் அனுபவமாம் !

No comments:

Post a Comment