19 August 2011

தெய்வத் திருமகள்

'தெய்வத் திருமகள்' தொடர்பாக எனக்கும் என் சக ஊழியருக்கும் நடந்த உரையாடல் :
நான் : ரொம்ப நாளாச்சு சார் , இப்படி ஒரு படம் பார்த்து ! நீங்க பார்த்தாச்சா ?
அவர் : கடைசியா சிறுத்தை பார்த்தேன் ...அதை விட சூப்பரா இருக்குமா ?
நான் : இல்ல சார்..இது வேற மாதிரி....படம் முழுக்க கண் கலங்கிப் பார்த்தேன்.
அவர் :ஒ....அழுகைப் படமா ? இப்படித்தான் போன தடவை நீங்க சொன்னீங்கன்னு 'நந்தலாலா' போய்ப் பார்த்தேன்...நல்லாவே இல்ல...
நான் : (அவர் பாஷையிலேயே ) இது அதை விட அழுகைப் படம், சார் ...
அவர் : அப்படின்னா நான் கண்டிப்பா போகல...
நான் : ம்ஹூம்...சோகத்தினால வர்ற அழுகை இல்ல....உணர்ச்சிவசப்பட்டு வர்ற அழுகை...
அவர் : அடப் போங்க சார்...தியேட்டருக்குப் போனோமா , ரெண்டு மணி நேரம் ஜாலியா இருந்தோமான்னு இல்லாம...
நான் : நீங்க போகலேன்னாலும் பரவாயில்லை...நாலு பேருக்கு டிக்கெட் வாங்கிக் கொடுத்துப் பார்க்கச் சொல்லுங்க சார்...இந்த மாதிரி படத்தை எல்லாம் என்கரேஜ் பண்ணனும் ....
அவர்: ஒண்ணு பண்ணுங்களேன்...நீங்களே டிக்கெட் வாங்கிக் கொடுங்க ...நான் வேணா போய் பார்க்கிறேன்.
நான்: எனக்கு இதுவும் வேணும் ...இன்னமும் வேணும்... (அட..மனசுக்குள்ளதாங்க!)

1 comment:

  1. sir its actually an english film named I AM SAM . that film was too good

    ReplyDelete