20 October 2011

சூப்பர் சிங்கர் ஜூனியர்


அடுத்த வதை ஆரம்பமாகி விட்டது. வதைக்கான கூடமும், வதைபடப் போகும் ஜீவன்களும் தயார். நாட்டாமைகளும் கோட் சூட் சகிதம் வந்து விட்டார்கள்.


பயிற்சி என்ற பெயரால் உடல் வருத்தமும் , விமர்சனம் என்ற பெயரால் மன அழுத்தமும் பெற்று துயரப்பட போகும் இந்த ஜீவன்களை ஈன்றவர்களைப் பார்த்து இப்படிக் கேட்கத் தோன்றுகிறது.
'ஏம்ப்பா (சற்று காரம் கூட்டி 'ஏண்டா' என்றும் விளிக்கலாம்)...தங்கறதுக்கு இடமும் , திங்கறதுக்கு சோறும் கொடுத்துட்டா ஒரு ஜீவனை, அதாம்ப்பா.... நீ பெத்த பிள்ளையை எப்படி வேணும்னாலும் கொடுமைப்படுத்துவியா ? பிள்ளைகளுக்கு அந்தந்த வயசுக்கு உண்டான சுதந்திரத்தையும் , சந்தோசத்தையும் கொடுங்கப்பா...'

Red Cross, Blue Cross மாதிரி இந்த சிறார்களைக் காக்க ஏதாவது ஒரு அமைப்பை சீக்கிரம் தொடங்கினால் தேவலாம்.

2 comments:

  1. Red Cross, Blue Cross மாதிரி இந்த சிறார்களைக் காக்க ஏதாவது ஒரு அமைப்பை சீக்கிரம் தொடங்கினால் தேவலாம். //

    ஆதங்கம் மிகச் சரி
    இன்றுதான் தங்கள் பதிவைப்பார்க்க முடிந்தது
    அருமையன பதிவுகள்
    தொடர வாழ்த்துக்கள்
    (வேர்ட் வெரிஃபகேஷனை நீக்கினால்
    பின்னூட்டமிடுவதற்கு வசதியாக இருக்கும் )

    ReplyDelete