13 October 2011

சம்சார சாகரம்

மனைவியின் அன்புத் தொல்லை.
உறவினரின் உரிமைத் தொல்லை.
செல்வங்கள் தான் என்றாலும்
பிள்ளைகள் தொல்லையோ தொல்லை.

நம் நேரம் நமதில்லை.
கண நேரம் ஓய்வில்லை
புறம் செல்ல வழியில்லை.
புறம் கூற இடமில்லை.

அச்சிறைப்பட்டோர் என்றேனும் மீள்வர்.
இச்சிறைப்பட்டோர் மாளாது மாள்வர்.
அச்சாகரம் கரை சேர்க்கும்.
இச்சாகரம் நுரை தள்ளும்.

ஆத்திகன் நாத்திகனாவான்.
நாத்திகன் ஆத்திகனாவான்.
சத்தம் சமாதானம் பேசும்.
சாத்வீகம் சண்டை போடும்.

ஏற்க நேரும் பாத்திரம் சில.
தோற்க நேரும் பாத்திரம் சில.
இல்லறத்தில் கவலைகள் பல
எனினும்
பிரம்மச்சரியத்தில் மகிழ்ச்சியே இல !

1 comment:

  1. எளிமையான சொற்களைக் கொண்டு
    அதி வலிமையான விஷயத்தை
    மிக அழகாகச் சொல்லிப்போகிறீர்கள்
    அருமையான பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete