02 November 2011

ஏன்..எதற்கு..எப்படி..1

தலைப்பைப் பார்த்து விட்டு இது சுஜாதா பாணியிலான அறிவியல் விளக்கக் கட்டுரையோ என நுழைந்தீர்கள் என்றால் அதற்கு நான் பொறுப்பல்ல. அவ்வப்போது தோன்றும் விடை தெரியாத ( தெரியா விட்டாலும் பரவாயில்லை போன்ற)வினாக்களை இங்கு பதிவதாக உத்தேசம். பதில் தெரிந்தவர்கள் பின்னூட்டமிடவும்.

# பால் விலை லிட்டருக்கு இரண்டு ரூபாய் உயர்ந்தால் , தேநீர் விலை குவளைக்கு ஒரு ரூபாய் உயர்வதை just like that சகித்துக் கொள்கிறோம் . எப்படி?

# 1 ரூபாய்க்கு பேரம் பேசுகிறவர்கள் 30 ரூபாய் அனுமதிச் சீட்டை 300 ரூபாய்க்கு வாங்கி திரைப்படம் பார்க்கின்றனர். எப்படி?

# பெரும்பாலான two wheeler mechanics செல்வம், குமார், பாண்டி , சேகர் போன்ற பெயர்களைக் கொண்டிருக்கிறார்கள். ஏன்?

# கி.பி.1800 ல் 100 கோடியாக இருந்த உலக மக்கள் தொகை படிப்படியாக அதிகரித்து , கருத்தடையின் முக்கியத்துவம் உணரப்பட்ட கடந்த 20 ஆண்டுகளில் மட்டும் 200கோடி அதிகரித்துள்ளது. எப்படி?

# scooty ஓட்டும் பெண்களை ஒரு போதும் overtake செய்ய முடிவதேயில்லை.ஏன்?

# மன நிம்மதி வேண்டி நாம் கோவிலுக்கு செல்வது போல் , அங்கிருக்கும் குருக்கள் மனக்கிலேசமென்றால் எங்கு செல்வார்?

# பேசும் போது நாக்கு வெளியே தெரிவதில்லை என்றாலும் , பெரும்பாலான நிகழ்ச்சித் தொகுப்பாளர்கள் ' இப்ப பாத்தீங்க நாக்க , இப்ப பாத்தீங்க நாக்க' என்று சொல்கிறார்கள். ஏன்?

# தவறு என்று தெரிந்தும் அதை அடிக்கடி செய்யவும், சரி என்று தோன்றுவதை முற்றிலுமாக தவிர்க்கவும் விரும்பும் மனதின் உளவியல் பின்னணி என்ன?


No comments:

Post a Comment