08 November 2011

குழந்தைகளின் உலகம்


நேற்றிரவு வெள்ளத்தில் சேதமடைந்த வீடுகளைத் தொலைக்காட்சியில் காண்பித்துக் கொண்டிருந்தனர்.பாதுகாப்பான தற்போதைய நமது நிலை கடவுளின் பரிசு என்பதை புவனுக்கு உணர்த்த விரும்பிய நான் பின்வருமாறு பேச்சை ஆரம்பித்தேன்.

"புவன்...அப்பா உன்னை மாதிரி குட்டிப்  பையனா இருந்தப்போ இது மாதிரி சின்ன  வீட்டுல தான் இருந்தேன். பெரிய மழை பெய்ஞ்சுதுன்னா வீட்டுக்குள்ள இப்படித்தான் எல்லா தண்ணியும் வந்துரும்.ஆனா இப்ப...."

புவன் இடைமறித்து குதூகலமானான். " நீங்கல்லாம் அப்ப ரொம்ப ஜாலியா இருந்திருப்பீங்க இல்ல , வீட்டுக்குள்ளேயே நீச்சல் எல்லாம் அடிச்சுக்கிட்டு ...."

நான் அதற்கு மேல் பேசவில்லை.

No comments:

Post a Comment