19 October 2012

இறுதிச் சுற்று


கற்பகம்
கதைப் புத்தகம் படிக்கும்போது  சொல்வாள்
நான்  எழுத்தாளராகி விடுவேன் என்று
அழகான ஓவியங்களைப் பார்க்கையில்
அற்புதமான ஓவியராகப் போகிறேன் என்பாள்
இனிமையான பாடல்களைக்  கேட்கும்போது
இனி நான் பாடகிதான் என்பாள்
ஒரு நேரம் நிருபர் என்பாள்
பிறகு புகைப்படக் கலைஞி என்பாள்
இறுதியில்
சுப்ரமணியனின் மனைவியாகிவிட்டாள் .


- சூ .ஜூலியட் மரியலில்லி 

1 comment: