22 October 2012

விடாது நெருப்பு




'தான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்என்பதாக நடக்கிறவர்களை விட , 'தான் பெற்ற துன்பம் பெறக்கூடாது இவ்வையகம்என்று  நினைப்பவர்கள் அதிகம் போற்றப்பட வேண்டியவர்கள் என்பது என் எண்ணம். தான் ரசித்து மகிழ்ந்த  திரைப்படத்தை பிறருக்கு பரிந்துரைப்பது நல்ல குணம் என்றாலும்தான் கீழே விழக் காரணமாயிருந்த பள்ளத்தில்  பிறர் விழுந்து விடாத வண்ணம் குச்சியை ஊன்றிவிட்டுச் செல்வது அதை விட மேலான குணம்.

எழுத்துச் சித்தர் பாலகுமாரன் அவர்கள் எத்தனையோ நல்ல விசயங்களை , அவற்றைக் கடைபிடிக்கும் வழிமுறைகளோடு, சுவாரசியமான கதைப் போக்கினூடாக நமக்குக் கற்றுக் கொடுத்தது போலவேவாழ்வின் முற்பகுதியில் தான் இழைத்த ஒரு தவறு, எவ்வாறு தன் வாழ்வின் பிற்பகுதியைச் சின்னாபின்னமாகச் சிதைத்தது என்பதைத் தெள்ளத் தெளிவாக  நம் முன் வைக்கிறார். தயவு செய்து கீழ்க்கண்ட சுட்டியில் உள்ள கட்டுரையைப் படியுங்கள்இந்தக் கட்டுரைப் பொருளுக்கும்உங்களுக்கு சம்பந்தம் இருக்கும் பட்சத்தில்யார் கண்டது...இந்த நாள் உங்கள் அந்திம காலத்தின் தினசரி வாழ்க்கைப் போக்கை செம்மைப்படுத்தக்கூடிய நாளாக அமையக்கூடிய வாய்ப்பிருக்கிறது


No comments:

Post a Comment