05 November 2012

ஏன்..எதற்கு..எப்படி 4

# கன்னடப் பட கதாநாயகர்கள்  மட்டும் ஏன் அவ்வாறு இருக்கிறார்கள்  ?!

# உலக இலக்கியம் மட்டும்தான் படிப்பதாகப் பீற்றிக் கொள்பவர்கள் , தமிழ் இலக்கியமும் உலக இலக்கியங்களுள் ஒன்றுதான் என்று தெரியாதவர்களா ?

# போட்டித் தேர்வு எழுதுபவர்களில் முக்கால்வாசிபேர்  கைகடிகாரம் அணிந்து வராமல், மணிக்கு இருமுறை கண்காணிப்பாளரிடம் மணி கேட்கிறார்களே , ஏன் ?

# மேடை நிகழ்ச்சிகளில் தங்களின் புகழ் பெற்ற பாடலைப் பாடும் பிரபல பாடகர்கள் extra சங்கதிகளைப் போடும் போது  கொலைவெறி உண்டாகிறதே ......அது எனக்கு மட்டும்தானா அல்லது எல்லோருக்குமா?

# Traffic Signal ஐ ,  நாம் நெருங்கும் போது  மட்டும் சொல்லி வைத்தாற் போல் red signal விழுவதைத் தவிர்ப்பது எப்படி ?

#  இனிப்பிற்கு பிரபலமான கடையில்  அதிக விலை கொடுத்து காரம் வாங்குவது தவறு என்ற எனது எண்ணம் சரியா , தவறா ?

#  லிட்டருக்கு ஒரு ரூபாய் விலையேறும்  நள்ளிரவுக்கு முன்பாகவே ,வண்டியில் பெட்ரோல் நிரப்ப, traffic jam ஆகும் அளவுக்கு பங்குகளில் அலைமோதும் மக்களின் சிக்கனத்தன்மையை  பாராட்டுவதா, நொந்து கொள்வதா? 


1 comment: