28 December 2011

இதை விட பெரிதாக

'வாழ்க்கை எப்படி போகிறது'
என்று கேட்டான்
ரொம்ப நாள் கழித்து
சாட்டில் வந்த நண்பன்.
முன் தினம் சரவணபவனில்
பெரிய தோசை வேண்டுமென
அடம் பிடித்து வாங்கிச்
சாப்பிட முடியாமல்
முழித்துக் கொண்டிருந்த
சிறுமியைப் பற்றிச் சொன்னேன்.
'அப்புறம் பார்க்கலாம்' என்று
மறைந்து போனான்.
என்னிடம் பெரிதாக
எதையேனும்
எதிர்பார்க்கிறார்களோ.

-முகுந்த் நாகராஜன்

No comments:

Post a Comment