04 December 2011

அசையும் அணு




நூறாவது இதழாக மலர்ந்திருக்கும் இந்த மாத 'உயிர்மை' யில் சிறப்புப் பகுதியாக கூடங்குளம் அணு உலை பற்றிய விரிவான அலசல் இடம் பெற்றுள்ளது. விவாதப் பொருளின் அனைத்துப் பரிமாணங்களும் ஆதி முதல் அந்தம் வரை மிக நேர்மையாக ஆராயப்பட்டு பல தரப்பட்ட விவாதங்கள் முன் வைக்கப்பட்டிருக்கின்றன. அனைவரும் அதை வாசிக்க வலியுறுத்துகிறேன்.

அதில் ஒரு பகுதியில் , தற்போது நடுநிலையாளர்களும் , மத்திய வர்க்கத்தினரும் எழுப்பும் பொதுவான ஒரு கேள்விக்கு கூடங்குளம் மக்களின் எதிர் கேள்வி பதிலாகத் தரப்பட்டுள்ளது.

கேள்வி: இத்தனை கோடி செலவு செய்து கட்டிய பிறகு உலையை மூடச் சொல்வது நியாயமா? பணம் வீணாகிறதே?

மக்களின் பதில்: உங்க மகளுக்குத் திருமணம் நிச்சயம் செய்து எல்லா செலவும் பண்ணி நாளைக் காலை கல்யாணம். பையனுக்கு எய்ட்ஸ் இருக்குன்னு முந்தின ராத்திரி தெரிய வந்தா , அடுத்த நாள் காலையில கல்யாணம் செய்வீங்களா? இத்தனை செலவு பண்ணிட்டோம், கல்யாணம் நடக்கட்டும்னு விடுவீங்களா?


நியாயமான பதில் நம்மிடம் இருக்கிறதா?









No comments:

Post a Comment