13 April 2009

அகம்-புறம்


திரை நாயகனின் உருகுதலில்
கதை நாயகியின் மருகுதலில்
புடம் போடப்படுகிறேன்...
நல்லதே நானாகிறேன்.
தாங்கும் வீடு,
தன்னலமற்ற நண்பர்கள்,
எனக்காய்
தன்னுயிர் தரும்
என்னுயிர்த் தோழி.
நினைத்துப் பார்க்கையில்
நீள் நிம்மதி.
ஆனாலும்
நிஜ வாழ்வின்
நிதர்சன நிமிடங்களில்
நிம்மதியின் நீளம் குறையத்தான் செய்கிறது -
காற்றின் எதிர்த்திசையில்
களியாட்டமிடும்
குதிரையின் வேகத்தைக்
கட்டுப்படுத்தாத
இயலாமையை எண்ணி.

-2000 ஆம் ஆண்டு டைரியிலிருந்து

No comments:

Post a Comment